பின்வரும் தகவல் இந்த இணையத் தளத்துக்கென்று மருத்துவத் துறை நிபுணர்கள் மற்றும் பொதுசன ஆரோக்கிய வல்லுநர்களால் வரையப்பட்டுள்ளது. கனேடிய அரச அமைப்புகள் மற்றும் விஞ்ஞான, மருத்துவ மூலவளங்களில் இருந்து பெறப்பட்ட தகவல் இதில் அடங்கி உள்ளது. மருத்துவத் துறையினரின் வைத்திய ஆலோசனையாக இதனைக் கருத வேண்டாம். கோவிட்-19 நோய் தடுப்பு மருந்து பற்றி உங்களிடம் எக்கேள்வி இருந்தாலும் தகைமை வாய்ந்த ஆரோக்கிய பராமரிப்பு வழங்குநர் ஒருவரின் அறிவுரையை நாடுங்கள்.
இது பற்றி நிச்சயமான முறையில் நாங்கள் எதுவும் சொல்ல முடியாது என்ற போதிலும் உங்களுக்கு தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட பின்பு கூட நோய் வைரசுக் கிருமியை நீங்கள் உங்களில் எடுத்துச் செல்கின்ற சாத்தியம் உள்ளது. தடுப்பு மருந்து வைரசுக் கிருமியினால் மக்கள் சுகவீனம் அடைவதைப் பாதுகாக்கின்றது என்பதை நாம் அறிவோம். ஆனாலும் உங்களுடைய நோய்த்தடுப்பு செயல்முறையின் பின்புகூட நீங்கள் வைரசுக் கிருமியினை உடலில் கொண்டு திரிந்து மற்றவர்களுக்குத் தொற்று பரப்புவராக இருக்க முடியும். சிகிச்சை ரீதியான பரீட்சார்த்த முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருவதுடன் நிஜ உலகச் சான்றுகள் புதிதாக வெளிவரும்பொழுது இது பற்றி மேலதிகமாக நாம் அறிவோம். இந்த நேரத்தில் நாங்கள் தொடர்ந்து எமது முகக் கவசங்களை அணிந்து, உடல் ரீதியாக விலகி நின்று, ஆரோக்கிய விதந்துரைகளை பின்பற்றி வரவேண்டிய தேவை உள்ளது. போதிய எண்ணிக்கையில் கனேடிய மக்கள் பூரணமாகத் தடுப்பு மருந்தினை எடுக்கும் வரையில் இவ்வாறு நாம் செய்ய வேண்டும் .
தடுப்பூசிக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உடலுக்கு இரண்டாவது டோஸுக்கு இரண்டு வாரங்கள் ஆகும். தடுப்பு மருந்தினை எடுப்பதற்கு சற்று முன்பாகவோ அல்லது எடுத்த பின் சற்று பின்பாகவோ ஒருவருக்கு வைரசுக் கிருமி தொற்றியிருக்குமானால் அவர் சுகவீனம் அடைய நேரிடலாம். ஏனெனில் தடுப்பு மருந்து பாதுகாப்பினைக் கொடுப்பதற்குப் போதிய நேரம் கிடைக்காது போயிருக்கும்.
தடுப்பு மருந்து ஏற்றப்படும் பொழுது இரண்டு பங்களவுகள் முழுமையான ஒரு தொடர் வரிசையில் ஒருவருக்குத் தேவையாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது.
கோவிட்-19 தடுப்பு மருந்துகளின் ஆரம்ப காலச் செயல்திறன் முதலாவது பங்களவை எடுத்த பின்பு ஏற்கெனவே மிக உயர்ந்த ஒன்றாக (80-92%) இருக்கிறது. அச்செயல்திறன் குறைந்த பட்சம் சில மாதங்கள் வரை நீடிக்கிறது.
பல டோஸ் தடுப்பூசிகள் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட பிறகு ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் பாதுகாப்பு வழங்குகிறது என்று அனுபவ ரீதியாக உணரப்பட்டிருக்கிறது. உண்மையில், நீங்கள் எவ்வளவு அதிகம் காத்திருக்கிறீர்களோ அந்தளவு சிறந்த பூஸ்டர் நோயெதிர்ப்புச் சக்தியைப் பெறுகிறீர்கள் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இது அறிவியலால் ஆதரிக்கப்படுகிறது.
பெரும்பாலான தடுப்பூசிகளுக்கு, ஆன்டிபாடி அளவுகள் (நோயெதிர்ப்புச் சக்தி) நாளடைவில் குறைந்துவிடும், திடீரென்று பாதுகாப்பான அளவுகளுக்குக் கீழே வீழ்ந்துவிடுவதில்லை. பல மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகும், வேறொரு தடுப்பூசி டோஸைப் போட்டுக்கொள்வது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம், இது நீண்ட கால பாதுகாப்பைக் கொடுக்கலாம்.
இப்போது கனடாவில் நமக்கு மிகவும் நம்பகமான தடுப்பூசி வழங்கல் இருப்பதால், டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி எட்டு வாரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆம், கனடாவின் பொதுச் சுகாதார நிறுவனம் தீர்மானிக்கும் வரை இப்போதைக்கு, மாஸ்க் அணிவதையும் இடைவெளியைப் பராமரிப்பதையும் கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி திறன்மிக்கதாக மாற (நோயெதிர்ப்புச் சக்தியை உருவாக்க) பல வாரங்கள் ஆகிறது என்பதும், கூடுமான வரை ஏராளமானோருக்கு ஃபைசர்-பயோஎன்டெக், மாடர்னா மற்றும் அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸை நிறைவுசெய்த பின்னரே அதிகபட்ச பாதுகாப்பை அடைய முடியும் என்பதுமே இதற்குக் காரணம்.
தடுப்பூசி போட்டவர்களுக்கு எவ்வளவு காலம் பாதுகாப்பு நீடிக்கும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளைப் பற்றிய ஆய்வுகள் தற்போது தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு குறைந்தது ஆறு மாதங்களுக்கு COVID-19 க்கு மிகவும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தன என்பதைக் காட்டுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி சிறிது காலம் நீடிக்கும் என்று தெரிகிறது, ஆனால் ஆய்வுகள் காலப்போக்கில் இதைப் பின்பற்ற வேண்டும்.
இந்த கட்டத்தில், நோய் எதிர்ப்பு சக்தி ஒரு வருடம் அல்லது பத்து ஆண்டுகள் நீடிக்குமா, அல்லது ஒரு கட்டத்தில் பூஸ்டர் ஷாட் தேவைப்படுமா என்பது எங்களுக்குத் தெரியவில்லை.
கோவிட்-19 தடுப்பு மருந்து ஏற்றப்பட்டதன் பின்பாக நோயெதிர்ப்புத் திறனை உடம்பு வளர்த்தெடுப்பதற்கு வழக்கமாக வெகு சில வாரங்கள் எடுக்கும். ஆனாலும் தடுப்பு மருந்தில் இருந்து மிகச் சிறந்த நோயெதிர்ப்புத் திறனை அடைவதற்கு Pfizer-BioNTech, Moderna மற்றும் AstraZeneca ஆகிய மருந்துகளில் இரண்டு மருந்துப் பங்களவுகள் உடலில் ஏற்ற வேண்டிய தேவை உள்ளது என்பதை மனதில் வையுங்கள். Johnson & Johnson தடுப்பு மருந்துக்கு ஒரு பங்களவு மட்டும் எடுக்க வேண்டி உள்ளது.
தடுப்பு மருந்து எடுத்த பின்பாக தற்காலிகமான விதத்தில் இலேசான அல்லது மிதமான அளவில் பக்க விளைவுகள் சாதாரணமாகத் தோன்றுவது உண்டு. இவற்றுள் அடங்குவன:
- மருந்தூசி ஏற்றப்பட்ட இடத்தில் வலி, சிவந்த தோல், வெப்ப உணர்வு, சொறியும் தன்மை அல்லது வீக்கம்,
- களைப்பான உணர்வு,
- தலையிடி,
- குமட்டல்,
- தசைநார் அல்லது மூட்டுவலி, மற்றும்
- இலேசான காய்ச்சல் அல்லது குளிர் நடுக்கம்.
இவை உங்கள் உடம்பு பாதுகாப்பினை உருவாக்குகிறது என்பதற்கான வழக்கமான அடையாளங்கள் ஆகும். இவ்வாறான அறிகுறிகள் வெகுசில நாட்களில் மறைந்து விடுகின்றன.
உங்கள் அறிகுறிகள் குறிப்பிடத்தக்கவை அல்லது மோசமானவை என்றால், உங்கள் சுகாதார வழங்குநரை அணுகவும். அவை COVID-19 உடன் ஒத்ததாக இருந்தால், சோதனை முடிவுகள் கிடைக்கும் வரை நீங்கள் சோதனை செய்து சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
மிகவும் அரிதாக, அனாபிலாக்ஸிஸ் எனப்படும் மிகவும் தீவிரமான பக்க விளைவு ஏற்படலாம். இது பொதுவாக பல நிமிடங்களில் அல்லது தடுப்பூசி போட்ட முதல் மணி நேரத்திற்குள் நிகழ்கிறது. இதன் காரணத்தால் கோவிட்-19 தடுப்பு மருந்து எடுப்பவர்கள் அதனை எடுத்த பின் குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் அதே ஸ்தலத்தில் தங்கி இருக்கும்படி கேட்கப்படுகின்றனர். இச் சமயத்தில் மருந்து ஏற்றிய நபர்களில் ஏதாயினும் பாரதூரமான எதிர் விளைவுகள் தோன்றுகின்றனவா என்று ஆரோக்கிய பராமரிப்புப் பணியாளர்கள் கண்காணித்துக் கொள்ளுவர்.
தடுப்பு மருந்து தொழிற்படுகிறதா அல்லது தொழிற்படவில்லையா என்பதற்கு அடையாளமாகப் பக்கவிளைவுகள் இருப்பதில்லை.
பக்கவிளைவுகள் தடுப்பூசி செயல்படுவதற்கான சாதாரண அறிகுறிகள் மற்றும் உங்கள் உடல் பாதுகாப்பை உருவாக்குகிறது என்பது உண்மைதான். இருப்பினும், உங்களுக்கு பக்க விளைவுகள் இல்லையென்றால் நீங்கள் கவலைப்பட வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. எடுத்துக்காட்டாக, எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைகளில் 90% க்கும் அதிகமான பெறுநர்களுக்கு பாதுகாப்பு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கின, ஆனால் 50% க்கும் அதிகமானோர் பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெரும்பாலான மக்கள் எந்த எதிர்வினைகளையும் அனுபவிக்கவில்லை, ஆனால் முழு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தனர்.
எனவே உங்களுடைய கோவிட்-19 தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட பின்பு பக்கவிளைவுகள் எதனையும் நீங்கள் உணரவில்லை என்றால், அது நீங்கள் கவலைப்பட வேண்டிய ஒரு விடயமாக இல்லை – பக்க விளைவு ஒன்றினை அனுபவித்த ஒருவரைப் போலவே அதே அளவு நோய்ப் பாதுகாப்பு உங்களுக்கும் வந்தடைந்து இருக்கும் !